இனிமையான வரிகள் என்றும் இனிமை
அழகான வரிகள் பத்து. | |
File Size: | 64 kb |
File Type: |
மனிதம் பற்றிய உளவியல் தகவல் | |
File Size: | 56 kb |
File Type: |
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். | |
File Size: | 62 kb |
File Type: |
வாழ்வில் வெற்றி பெற மரண படுக்கையில் லட்சுமணனுக்கு ராவணன் சொன்ன 3 ரகசியம் ! | |
File Size: | 401 kb |
File Type: |
பல்லக்கு தூக்கிகள் | |
File Size: | 393 kb |
File Type: |
கல்லணை வரலாறு (kallanai dam history in tamil) | |
File Size: | 2291 kb |
File Type: |
மனவலிமை கொண்டவர்களிடம் பொதுவாக காணப்படும் 5 முக்கிய பழக்கங்கள்.! | |
File Size: | 761 kb |
File Type: |
பிரதமர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க..
( பொதுநலன் கருதி பதிவு )பிரதமர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH க்கு முதலில் போங்க.. அங்க காப்பீடு திட்ட கார்டு கேட்டு வாங்கணும் . ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி பூர்த்தி செயது அதை தங்கள் பகுதி VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துறை எழுதி வாங்கிக்கோங்க... (குடும்பத்துல இருக்கிற எல்லோரோட ஆதார் மற்றும் ரேசன் கார்டு ஒரிஜினல் மற்றும் நகல் எடுத்து யாரேனும் ஒருவர் செல்லவும்.) பின் VAO எழுதி சீல் போட்டு தரும் அப்ளிகேஷன் ஐ எடுத்து கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்லவும்.. அங்கே முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அறை என்று ஒன்று இர... read more
தினம் ஒரு மூலிகை - துத்தி
‘துத்தி’ என்ற பெயரைக் கேட்டவுடன், ஏதோ குழந்தையின் மழலை மொழி போல் காதில் கேட்கிறதா? இல்லை… அழகான பெயருடன் இயற்கை மொழி பேசும் அற்புதத் தாவரம்தான் துத்தி. குழந்தையின் மழலை மொழி தரும் இனிமையைப் போலவே, துத்தியின் உறுப்புகளும் தனது மருத்துவக் குணங்களின் மூலம் நமக்கு இனிமையை அள்ளிக்கொடுக்கும். துத்தியின் தாவரவியல் பெயர் *‘அபுடிலன் இண்டிக்கம்’ (Abutilon indicum).* இதன் குடும்பம் ‘மால்வாசியே’ (Malvaceae). அபுடிலின் - A (Abutilin-A), அடினைன் (Adenine), ஸ்கோபோலெடின் (Scopoletin), ஸ்கோபரோன் (Scoparone) ஆகிய தாவர வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளது. **துத்தி* *மூல நோயின் முதல்வன் துத்தி இலை இதில் ஒன... read more
தவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது
தவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது ஆன்லைன் மூலம், பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்கு அனுப்பும்போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒரே ஒரு எண் மாறினால்கூட சரியான நபருக்குப் போய்ச் சேரவேண்டிய பணம் எங்கோ இருக்கும் தவறான நபருக்குப் போய்ச் சேர்ந்துவிடும். இப்படி தவறான நபருக்கு நாம் பணத்தை அனுப்பிவிட்டால், அந்தப் பணத்தை எப்படித் திரும்பப் பெறுவது..? அந்தச் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்விகள் முக்கியமானவை. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைப்படி, பணப்பரிமாற்றம் செய்யும்போது சரியான பயனாளியின் கணக்கு எண் ... read more
தை அமாவாசை பித்ரு தர்ப்பணம்
*தை அமாவாசை* நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கிற போதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. பித்ருக்கள் பக்ஷமான தை அமாவாசையன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜா, அனுமதி தருவார். யமத் தூதர்கள் நமது பித்ருக்களை பூலோகத்திற்கு அழைத்து வருவார்கள். பித்ருக்களும் அவரவர் சந்ததியினர் இல்லத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், வருவார்களாம். எனவே அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். பித்ரு தேவர்க... read more
மகள்கள் தேவதைகள்-அதிர்ஷ்டமான தந்தைகள்
ஒரு கர்ப்பிணிப் பெண் தன் கணவரிடம் கேட்டாள், நீங்கள் என்ன குழந்தையை எதிர்பார்க்கிறீர்கள்? ஆணா பெண்ணா? கணவன்- "நமக்கு ஒரு பையன் பிறந்தால் , நான் அவனுக்கு கணிதம் கற்பிப்பேன், நான் அவன் விரும்பும் விளையாட்டுகளை கற்பிப்பேன், பொழுது போக்காக இசையை கற்றுக் கொடுப்பேன்." மனைவி - "ஹா.. ஹா.. அதுவே ஒரு பெண்ணாக இருந்தால்?" கணவன் - நமக்கு ஒரு பெண் பிறந்தால்.. நான் அவளுக்கு எதுவும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. ஏனென்றால் அவள்தான் எனக்கு எல்லா விஷயங்களையும் கற்றுத் தருவாள், எப்படி உடை உடுத்த வேண்டும், எப்படி பேசக்கூடாது., இதெல்லாம் மீண்டும் ஒருமுறை அவளிடம் கற்பேன். அவள் கற்பிப்பாள். சுருக்கமாக... read more
தள்ளிப்போடுதலைச் சமாளிக்க 10 பயனுள்ள வழிகள்
1. பணிகளைச் சிறிய படிகளாகப் பிரித்து, அவற்றை மிகக் குறைவானதாக மாற்றவும். 2. அவசர உணர்வை உருவாக்க குறிப்பிட்ட, அடையக்கூடிய இலக்குகளை காலக்கெடுவுடன் அமைக்கவும். 3. முக்கியத்துவத்தின் அடிப்படையில் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, அதிக முன்னுரிமை உள்ள பொருட்களை முதலில் சமாளிக்கவும். 4. Pomodoro டெக்னிக் போன்ற கவனம் செலுத்தும் பணி இடைவெளிகளுக்கு டைமரைப் பயன்படுத்தவும். 5. அறிவிப்புகளை முடக்கி அல்லது பிரத்யேக பணியிடத்தை உருவாக்குவதன் மூலம் கவனச்சிதறல்களை நீக்கவும். 6. நேர்மறையான நடத்தையை வலுப்படுத்த பணிகளை முடித்த பிறகு நீங்களே வெகுமதி அளிக்கவும். 7. உந்துதலை அதிகரிக்கவும்... read more
மனிதர்கள் பல விதம்
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப் படாதே. நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டு பிடிக்கக் கூடிய மனிதர்களும் இருந்து கொண்டு தான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே. *உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.* ஒன்றை மட்டும் தெரிந்து கொள். *ஒவ்வொரு மனிதனும்* *தனித் தனி ஜென்மங்கள்.* அவர்களுக்கென்று தனித் தனி ஆசா பாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்ற பின் திரும்பி வருவார்கள். ... read more
முசுமுசுக்கை - தினம் ஒரு மூலிகை
**முசுமுசுக்கை*.* தாவரவியல் பெயர் Mukia Madarspatana. சித்தர்கள் இதனை இரு குரங்கின் கை என அழைப்பார்கள் பித்தம் அதிகமானால் இம்மூலிகையை பறித்து லேசாக இடித்து ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட குணமாகும் தலைசுற்றல் இம்மூலிகையை பறித்து இடித்து காடியில் புளித்த நீர் வதக்கி தலையில் வைத்து கட்டி நித்திரை செய்ய நோய்கள் தீரும் இதன் இலை காசம் கோழை சுவாசம் நெஞ்சில் புகை கம்மல் ஜலதோஷம் ஆகியவை நீக்கும் முசுமுசுக்கை வேறினால் துர்காந்தத்துடன் குறுகிய கோழை சாதாரண விஷம் சக ரோகம் மார்பு நோய் பக்கவாதம் இவைகள் போகும் பித்தம் தனியும் மூளை பலம் பெறும் இந்த மூலிகையில் சுண்ணாம்பு சத்தும் செம்புச்... read more
வேங்கை மரம் - தினம் ஒரு மூலிகை
*வேங்கை மரம்**. பச்சையான அழுத்தமான அகன்ற இலைகளையும் மஞ்சள் நிற பூக்களையும் உடைய பெரு மரம் வேங்கை இலை பட்டை பிசின் ஆகியவை மருத்துவ குணம் உடையது இலை வீக்கம் கரைக்கும் புன் அழுகல் அகற்றும் பட்டை துவர்த்தியாக செயல்படும் பிசின் துவர்பியல் குருதிப் போக்கு அடக்குதல் மலமிளக்குதல் குணம் உடையது வேங்கை பட்டையை உலர்த்தி பொடித்து ஐந்து கிராம் அளவாக சர்க்கரை கலந்து நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர சரியா கழிச்சல் சீத கழிச்சல் ஆகியவை தீரும் வேங்கை பிசினை உலர்த்தி பொடித்து அரை கிராம் முதல் ஒரு கிராம் அளவாக கொடுக்க வெள்ளை நீர்த்த கழிச்சல் சீத கழிச்சல் ஆகியவை தீரும் வேங்கை பிசின் பொடியை பு... read more
வாழ்வைக் கொண்டாடுவோம்
🍄 ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது. நரிக்கு ஏக குஷி… 🍄 “நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுப் படியாகும்!’ என்று ஊளையிட்டது. 🍄 கொஞ்சம் சின்ன விலங்குகளை ஏளனத்துடன் அலட்சியப் படுத்தியபடி தன் பசிக்குக் குறைந்தபட்சம் ஒரு யானை, யானை என்றபடி காடு முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தது. தேடிக் கொண்டே இருந்தது; பாவம், ஒன்றும் கிடைக்கவில்லை. 🍄 மதியம் தலைக்கு மேலே உ... read more
வெள்ளிலோத்திரம் - தினம் ஒரு மூலிகை
* **வெள்ளிலோத்திரம்** மலை பகுதியில் வளரும் பசுமையான சிறு மரம் நீண்ட போல் போன்ற இலைகளையும் வெள்ளை அல்லது மங்கலான நிறத்துடன் உள்ள மலர்களையும் உடையது பழங்கள் செந்நிறமாகவும் ஒன்று முதல் மூன்று விதைகளை உடையது இதன் பட்டையும் கட்டையும் மருத்துவ குணம் உடையது குளிர்ச்சி உண்டாக்கியாகவும் நஞ்சு நீக்கியாகவும் செயல்படும் பச்சை பட்டையை இடித்து எடுத்த சாறு 30 துளி அளவாக காலை மாலை கொடுத்து வர கருப்பை தொடர்பான நோய்கள் சீத கழிச்சல் சூட்டு கழிச்சல் ஆகியவை குணமாகும் அதிமதுரம் மாதுளம் பழத்தோல் மருதம்பட்டை ஆகியவற்றின் பொடி சம அளவாகவும் வெள்ளி லோத்திரப் பட்டை பொடி மூன்று மடங்காகவும் சேர்த்து கலந்து வை... read more
ஆடாதோடை - தினம் ஒரு மூலிகை
**ஆடாதோடை** தாவரவியல் , பெயர் Adathoda Vasica இம் மூலிகையின் மூலம் சளி ஆஸ்துமா போன்ற பல நோய்கள் குணமாகும் வேறினால் இருமல் அக்கினி மாந்தம் பித்தம் மகா சுவாசம் சளி ரோகம் முதலிய நோய்கள் போகும் சளியை அறவே நீக்கும் இதை இனிமையான குரலுக்கு சொந்தக்காரன் என்றும் அழைக்கலாம் ஆடாதோடை இலையை காய வைத்து இடித்து பொடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டு பனங்கற்கண்டு பாலுடன் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர குரல் வளம் மேம்படும் கை கால் நீர் கட்டுதல் வாத வலிகள் திரேக வலிகள் வறட்டு இருமல் இளைப்பு வயிற்று வலி காமாலையும் தீரும் இம்மலிகையில் ஈயம் சத்து அதிகம் உள்ளது இதன் இலைகளை பச்சையாக அதனுடன் சிறிது மிள... read more
வெண்கடுகு - தினம் ஒரு மூலிகை
*வெண்கடுகு**. வீட்டில் சாம்பிராணி போடும்போது வெண்கடுகையும் கலந்து போட்டுப் பாருங்கள் கேட்டது விலகி மன நிம்மதி தொடங்கி பல விஷயங்கள் தானாக வந்து சேரும் வெண்கடுகு கால பைரவரின் அம்சம் பொருந்தியது பிரபஞ்சத்தினை தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் பாதுகாவலர் எனவே கால பைரவரின் அம்சம் பொருந்திய இந்த வெண்கடுகை நாம் பயன்படுத்தி வீட்டில் சில பரிகாரங்கள் செய்வதின் மூலம் நம்மை சுற்றியுள்ள தீமைகளை அழிக்க முடியும் கடுகு வகையில் வெண்மையானது வட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது விதையிலிருந்து எடுக்கப்படும் என்னை மருத்துவ பயனுடையது வாந்தி உண்டாக்குதல் நரம்பு உரமாக்குதல் சிறுநீர் பெருக்குதல் செரிமானம் ... read more
மணத்தக்காளி - தினம் ஒரு மூலிகை
*மணத்தக்காளி. * மிளகு தக்காளி என்றும் அழைப்பார்கள் இதன் தாவரவியல் பெயர் Solanum nigrum மணத்தக்காளி இலையை பறித்து கீரைகளை சமைத்து சாப்பிடுவது போல சாப்பிட்டு வர வயிற்றுப்புண் ஆறும் அக்கினி மான்தம் வீக்கத்தை குணமாக்கும் காய்ச்சலை போக்கும் விக்கல் திரிதோஷ நோய்கள் மேகச்சொறி வெள்ளை போவதை தடுக்கும் சூட்டை தணிக்கும் சளி நாக்குப்பும் சூட்டை போக்கும் மணத்தக்காளியை வற்றல் செய்து சாப்பிட நீர் பேதி குணமாகும் வாந்தியும் இழப்பும் நீங்கும் அல்சரை போக்கும் விஷத்தை போக்கும் இந்த மணத்தக்காளி கீரை இரும்பு சத்தும் கால்சியம் சத்தும் அதிகமாக உள்ளது நன்றி. நீண்ட நாள்கள் நோயால் பாதிக்கப்படுபட்டவர்களுக்... read more
யார் நல்லவர்?
1. நம்பிக்கைத் துரோகம் செய்யாதவர், 2. தன் சுய நலத்துக்காக அடுத்தவருக்குக் கெடுதல் செய்யாதவர். 3. தன் சுயநலத்துக்காக அடுத்தவரை சாமர்த்தியமாகவும், திட்டமிட்டும், அவர்களுக்கு சிரமம் கொடுப்பதைப் பற்றிக் கவலைப் படாமலும் உபயோகித்துக்கொள்ளும் 'திறமை' இல்லாதவர், 4. தன்னால் முடியும் என்றால் முடியும் என்றும், முடியாது என்றால் முடியாது என்றும் சொல்லி, முடிந்ததைச் செய்து கொடுப்பவர். முடியாததையும், செய்ய விருப்பம் இல்லாததையும் பளிச்சென்று சொல்லாமல் ஏதோ செய்யப்போவதுபோலக் காட்டிவிட்டுச் செய்யாமல் இருப்பவர் அல்லர். அதாவது, நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர் அல்லர். 5. உண்மை பேசுபவர். அவர் சொன்னால் கண... read more
பல் கவிதை
என் பல்லிடுக்கில் ஒரு பருக்கை புகுந்தது! பல நாளாய் அங்கு படுத்துக் கிடந்தது! என் பற்தூரிகை அதை பார்க்க மறந்தது! பருக்கையோ வாயில் இருக்கை அமைத்தது! பாக்டீரியாவை அது பந்திக்கழைத்தது! பற்றுயிரி என் பல் சிதைத்தது! பற்குழி வெட்டி பாத்தி அமைத்தது! பல்லாங்குழியாய் பரவி வளர்ந்தது! சிரிக்கையில் அது என் சிங்காரம் கெடுத்தது! நரம்புவரை சென்று நங்கூரமிட்டது! கூச்சமும் வலியும் கூட்டணி சேர்ந்து! அது கூரிய ஊசி குடைவதைப் போன்றது! வேம்பின் காம்புகள் வீட்டில் சேர்ந்தது! கிராம்பு ஏலக்காய் சீக்கிரம் தீர்ந்தது! வீட்டு வைத்தியம் வீணென்றானது! விடிய விட... read more
காலையில் வெறும் வயிற்றில் டீ, காபி குடிக்கலாமா?
பொதுவாக, வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பது நல்லதல்ல என்று தான் கூறப்படுகிறது. டீ மற்றும் காபியில் காஃபின் உள்ளது, இது வயிற்று அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கக்கூடும். இது வயிற்று எரிச்சல், நெஞ்செரிச்சல், குமட்டல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும், காஃபின் சிறுநீரை அதிகரிக்கக்கூடும், இதனால் நீரிழப்பு ஏற்படலாம். சிலருக்கு, வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதால் தலைவலி, தூக்கமின்மை, பதட்டம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். எனவே, காலையில் வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. காலை உணவுடன் அல்லது காலை உணவுக்குப் பிறகு டீ, காபி குடித்தால் இந்தப் பிரச்சனைகள் ஏற்... read more
சீதாப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
சீதாப்பழம் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். சீதாப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்புச்சத்து, ஆன்டி ஆக்ஸிடண்ட் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மை பயக்கின்றன. சீதாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சில: சீதாப்பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகியவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. சீதாப்பழம் சாப்பிடுவதால் எலும்புகள் வலுப்பெறவும், எலும்பு தேய்மானம் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது. சீதாப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இதனால் இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்க உதவுக... read more
கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன. கறிவேப்பிலையில் உள்ள சில முக்கிய நன்மைகள் பின்வருமாறு: கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலை பல்வேறு தொற்றுகள் மற்றும் கிருமிகளிலிருந்து பாதுகாக்கின்றன. கறிவேப்பிலையில் உள்ள குரோமியம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த ... read more